ராஷ்மிகாவிற்கு என்ன ஆச்சு?விமான நிலையத்தில் வீல்சேரில் வந்த ராஷ்மிகா.. வருத்தத்தில் ரசிகர்கள்..!
விமான நிலையத்தில் ராஷ்மிகா வீல் சாரில் வர ரசிகர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.

கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் புஷ்பா, வாரிசு, அனிமல் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் என்றே சொல்லலாம். சமீபத்தில் இவரது நடிப்பில் புஷ்பா2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு காரில் வந்து இறங்கி நொண்டி நொண்டி நடந்து வந்து வீல்சேரில் உட்கார்ந்து செல்வது போல் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரஷ்மிகாவின் ரசிகர்கள் என்னாச்சு என்று சோகத்தில் இருக்கின்றனர்.
இது மட்டுமில்லாமல் ராஷ்மிகாவிற்கு விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
Rashu was spotted in a wheelchair at the airport due to a leg injury 🥺🫂
We cannot see you in these conditions @iamRashmika 😩
Wishing her a speedy recovery 🙏🏻❤️#RashmikaMandanna pic.twitter.com/NgGiZHBwSw— Rashmika Lover's❤️🩹 (@Rashuu_lovers) January 22, 2025