நீங்கள் நடித்த படங்களில் இரண்டாம் பாகத்தில் எந்த படத்தில் நடிப்பீர்கள்? : சிவகார்த்திகேயன் சொன்ன பதில்..!

நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தை இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கோங்கார இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த இரண்டு திரைப்படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இடம் நீங்கள் நடித்த படங்களில் இரண்டாவது பாகம் நடித்தால் எந்த படத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
அதாவது மாவீரன் படத்தில் நான் இரண்டாவது பகுதி செய்வேன் ஏனென்றால் அது தனித்துவமான ஸ்கிரிப்ட் என கூறியுள்ளார்.இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

