நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க இருக்கும் இரண்டு படங்களுக்கு தனது சம்பளத்தை நடிகர் கமல்ஹாசனை விட அதிகமாக உயர்த்தி கேட்டிருக்கிறார்.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படங்களில் நடிப்பதற்கு நடிகர் ரஜினி, கமல்ஹாசனை விட அதிகமான சம்பளத்தை கேட்டிருப்பதாகவும் அதற்கு லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் கமல் ஹசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அந்த வகையில் நடிகர் ரஜினி நடிக்க இருக்கும் இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரூ. 300 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.