குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பிரபுதேவா.. போட்டோஸ் இதோ.!!
குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை தனது நடன திறமையால் மாசாக ஆட வைத்த புகழ் பிரபு தேவாவிற்கு உண்டு. இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் சொல்லப்பட்ட வருகிறார்.
நடன மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.காதலன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே என பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரபுதேவா திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு மனைவி மற்றும் மகளுடன் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
