நடிகர் நாசர் பிரபல முன்னணி நடிகரான ஜீவாவை குறித்து ஏளனமாக பேசியதால் தனது படத்தின் மூலம் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் மாபெரும் இயக்குனரான பாலச்சந்தரின் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் நாசர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக பல படங்களில் நடித்து அசத்தி வந்தார். அதற்குப்பின் காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு தற்போது சிறந்த குணசத்திர வேடங்களில் நடித்த அனைவருக்கும் ஃபேவரிட் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் நடிகர் ஜீவாவை பற்றி ஏளனமாக பேசியது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜீவா தனது முதல் படத்தில் நடிக்க போகும் போது நடிகர் நாசரிடம் தான் ஆசிர்வாதம் வாங்க போனாராம். ஆனால் நாசர் ஜீவாவிடம் நீ தயாரிப்பாளரின் மகனா இருக்கிறதனால நடிக்க வந்துருவியா? என்று கேட்டு ஏளனமாக பேசியுள்ளாராம்.

ஆனால் ஜீவா நடிப்பில் வெளியான “83”என்ற படத்தை பார்த்து கண் கலங்கி விட்டாராம் நாசர். ஜீவாவின் இந்த 83 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், வெற்றியும் பெற்ற படமாகும். இப்படி இந்திய அளவில் திறமை மிக்க நட்சத்திரமாக ஜொலிக்க கூடிய ஜீவாவை அன்றைக்கு அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது என நினைத்து நடிகர் நாசர் கண்கலங்கினாராம். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.