ஊரடங்கும் உணவில்லாமல் வாழும் தெருவோர மக்களுக்கு பிரபல நடிகர் ஒருவர் உதவியுள்ளார்.
Actor Bashir Helps to Underprivileged : சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 8.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இதனால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சாலையோரம் வசிக்கும் மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அப்பாவைப் போல அதே சிரிப்பு.. முதல் முறையாக வெளியான நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் மகள் புகைப்படம்!
இந்த நிலையில் சென்னையில் சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் இரவில் உணவு அளிக்கிறார் நடிகர் ஜெ.எம். பஷீர்.
இவருடைய இந்தச் செயல் மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.