ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில், படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விபத்தில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதே ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.