கண்கள் சந்திக்கும் போது உலகங்கள் மாறுகின்றன.. அமீர்,பாவணியின் லவ்வபுல் போட்டோ ஷூட்..!

அமீர்,பாவணி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானவர் பாவனி. இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக அமீரும் பங்கேற்று இருந்தார். அமீர் பாவணியிடம் காதலை வெளிப்படுத்திய போதும் மௌனம் காத்து வந்தார் ஆனால் நிகழ்ச்சிக்குப் பிறகு பாவானியும் காதலிப்பதாக அறிவித்த இருந்தார்.
சில வருடங்கள் இவர்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்து இருந்த நிலையில் தற்போது கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் பிரியங்கா மற்றும் அவரது கணவர் வசி இருவரும் கலந்து கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது கணவருடன் லவ்வபுல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதில் கண்கள் சந்திக்கும் போது உலகங்கள் மாறுகின்றன என்று பதிவிட்டு அதில் இருவரும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்..
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram