எனது மனமாற்றத்திற்கு டி.ராஜேந்தர் தான் காரணம்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு, வைரல்
டி.ராஜேந்தர் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்..
ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவிக்கையில், ‘நான் பார்த்து இன்ஸ்பியர் ஆன மனிதர்களில் டி.ராஜேந்தர் சாரும் ஒருவர். இளையராஜா, எம்எஸ்வி, மகாதேவன் என பலரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன்.
ஆனால், டிஆர் சார் கிட்ட வேலை செய்யும்போது அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தனிமை விரும்பியாக இருந்த நான், எல்லோருடனும் கலகலப்பாக பழகும் நபராக மாறினேன். அதற்கு முக்கிய காரணம் ராஜேந்திரன் சார் தான்.
ஏற்கனவே டி.ராஜேந்தர் பற்றி தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பெருமையாக சொல்வார்கள். சினிமாவில் டி.ராஜேந்தர்போல ஒரு ஜென்டில்மேன் கிடையாது என்பது பல நடிகைகளின் பாராட்டாக இருக்கிறது.
மீ டு பிரச்சனை, அட்ஜஸ்மென்ட் பிரச்சினை வரும்போது கூட டி.ராஜேந்தரை தான் பலரும் பெருமையாக பேசுகிறார்கள். எந்த நடிகையின் மீதும் கைகூடப்படாமல் நடிப்பார். எந்த நடிகையிடமும் தவறாக நடந்து கொள்ள மாட்டார். எல்லோரிடமும் சகோதர அன்போடு தான் பழகுவார் என்று பேசியிருக்கிறார்கள்.
கலகலப்பாக பேசக்கூடியவர், அதே நேரத்தில் சகலகலா வல்லவனாகவும் வலம் வருகிறார். இசையை முறைப்படி கற்கவில்லை என்றாலும், அவர் பாடும் பாடல்கள் மக்களின் மனதில் இயல்பாக இடம் பிடித்திருக்கின்றன.
மேலும் நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், பாடகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் டி.ராஜேந்தர் குறித்து ஏ.ஆர்.ரகுமானும் பாராட்டி பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி தெறிக்கிறது.