விஜயாவை பார்த்து வியந்த முத்து, சந்தோஷத்தில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

Web Ads

விஜயாவை பார்த்து முத்து வியக்க, மீனா சந்தோஷப்பட்டு உள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 07-08-25
SiragadikkaAasai Serial Today Episode Update 07-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா விஜயாவின் வீட்டு முன் வந்து மீனாவிற்கு ஃபோன் போட்டு வரச் சொல்லுகிறார் எதுக்குமா வெளியே இருந்து

போன் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று கேட்க உன் மாமியார் என்ன பேசினாலும் எதுவும் எதிர்த்து பேசாத என்று சொல்லுகிறார். அதெல்லாம் எனக்கு பழகிடுச்சுமா நீ வா என்று சொல்லி உள்ளே அழைத்துச் செல்ல அண்ணாமலையே கூப்பிட்டு அம்மா வந்திருக்காங்க மாமா என்று சொல்லுகிறார். உடனே முத்துவும் வரவேற்க விஜயா வந்தவுடன் சந்திரா வணக்கம் சொல்ல வழக்கம் போல் விஜயா முகம் சுளித்துக்கொண்டு உட்காருகிறார்.

Web Ad 2

மீனாவிடம் தட்டெடுத்துக் கொண்டு வரச் சொல்ல என்ன விஷயமா என்று அண்ணாமலை கேட்க சீதாவுக்கு தாலி பிரித்து கொடுக்கிறார்கள் என்று சொல்லுகிறார் உடனே விஜயா வழக்கம் போல் இப்ப என்ன பெரிய ஹோட்டல் இல்லையா பண்ண போறாங்க கல்யாணமே பத்துக்கு பத்து ரூம்ல பண்ணாங்க இது மட்டும் எங்க பண்ண போறாங்க என்று சொல்ல விஜயாவை அண்ணாமலை முறைக்கிறார். சீதாவோட மாமியார் வீட்ல தான் பங்க்ஷன் பண்றதா சொல்லி இருக்காங்க கண்டிப்பா நீங்க வரணும் என்று சொல்ல வெள்ளிக்கிழமை எனக்கு முக்கியமான வேலை இருக்குமா அதனால என்னால வர முடியாது என்று சொல்ல விஜயா உடனே டாக்டர் பட்டம் பற்றி விஷயத்தை யோசித்து விட்டு சரி அவர் வரலைன்னா என்ன நான் வந்து ஃபங்ஷனை நல்லபடியா நடத்திக் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார்.

உடனே அனைவரும் அதிர்ச்சியாக ஸ்ருதி ஆன்ட்டி இப்போ அம்பி மூடுக்கு மாறிட்டாங்க என்று சொல்லுகிறார் உடனே சந்திராவிடம் நீங்க எதுக்கு சம்மதிக்காமல் படுறீங்க நான் கண்டிப்பா வந்துடறேன் என சொல்ல சந்திரா வியப்பாகப் பார்க்கிறார் பிறகு அவரிடம் நல்லபடியாக பேசி அனுப்பி வைப்பதை பார்த்துவிட்டு சந்திரா சந்தோஷப்படுகிறார். மீனா முத்துவிடம் அத்தை எப்படி நடந்துக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்களும் நாளைக்கு கண்டிப்பா வரணும் என்று சொன்ன சரி வரேன்னு நான் சொல்லுகிறார். மறுநாள் காலையில் விஜயாவும் பார்வதியும் பங்க்ஷனுக்கு கிளம்பி வர ஆட்டோவில் வரும்போது பார்வதி விஜயாவிடம் உன்ன புரிஞ்சிக்கவே முடியல என்ற சொல்ல இத்தனை வருஷமா என் கூட இருக்க உன்னால எனக்கு புரிஞ்சுக்க முடியலையா என்று கேட்கிறார் நீதான் மீனாவோட அம்மா வீட்டு பங்க்ஷன் கலாம் வர மாட்டியே என்று கேட்க இப்ப நம்ம எதை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கோம் டாக்டர் பட்டத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கோம் அதுக்காக தான் நான் வரேன் என்று சொல்லுகிறார் அங்க நான் மீனா ஓட பூ கட்டறவங்க கூட கைகுலுக்கி பழகுவார்கள் என்று சொல்லி சொன்னவுடன் ஓ அங்கேயும் உன்னோடு வேலைக்காக தான் வரியா என்று சொல்லுகிறார். மறுபக்கம் முத்து மீனா க்ரிஷ் ஸ்ருதி நான் வரும் வந்து இறங்க அவர்களை உள்ளே வந்தவுடன் வரவேற்கின்றனர் பிறகு அருண் மற்றும் முத்து இருவரும் கை கொடுத்து விட்டு பிறகு முத்து கிருஷ்யை அழைத்துச் சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் பார்வதியும் விஜயாவும் ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர்.

பிறகு அவர்களை வரவேற்று உள்ளே கூப்பிட உடனே வீடியோவை ஸ்டார்ட் பண்ணி விடுகிறார் விஜயா வழக்கம் போல் அனைவரிடமும் நடித்துக் கொண்ட பிறகு நான் பூ கற்றவளோட கூட்டாளிங்க கிட்ட போய் பேசுற அதையும் வீடியோவா எடு என்று சொல்ல அவர்களிடமும் கைகோர்த்து கட்டிப்பிடித்து பேசுவதை பார்த்து அனைவரும் வியப்பாக இருக்கின்றனர்.பிறகு என்ன நடக்கிறது? விஜயா என்ன சொல்லுகிறார்?மீனா என்ன பண்ணப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 07-08-25
SiragadikkaAasai Serial Today Episode Update 07-08-25