நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் ஸ்கிரீன்கள் அதிகரித்து உள்ளது.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ‘சர்தார் ‘ திரைப்படம் வெளியாகி இருந்தது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் இடையே வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வெளியான ஒரே வாரத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் சர்தார் திரைப்படம் முதல் வாரத்தில் 380 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டிருந்தது, ஆனால் தற்பொழுது இரண்டாவது வாரத்தில் 500 ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டு அதிகரிக்கப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.