Edappadi Palanisamy‘s Good Moves – Tamil Nadu Got First Place
DMK Decision on Election 2021 : பிராசாந்த் கிஷோரின் ஆலோசனை படி, வரும் சட்ட மன்ற தேர்தலில், 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக தனித்து போட்டியிடப் போகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகள் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவி கண்டிப்பாக வேண்டும் என கேட்டு வருகிறது. இந்த பிரச்சனை ஓய்வதற்குள் தற்போது திமுகவிற்கு அடுத்த பிரச்சனை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக தீர்க்கமாக முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மற்ற கட்சிகளையும் தங்களது கட்சி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்து வருகிறது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த முடிவினால் கூட்டணி கட்சிகள் திமுகவின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியான நிலையில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும், “நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் வைகோ கூறியுள்ளார்.
அதேபோல சட்டப்பேரவை தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்தது திமுகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கூட்டணி மற்றும் சின்னம் குறித்து கேள்வி எழுப்புகையில் அதிலிருந்து நழுவுவது போல், திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,” எந்த கட்சி எந்த சின்னத்தில் போட்டி என்பதை தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுப்போம், இன்னும் இது குறித்து முடிவெடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த முறை ரஜினி தேர்தலுக்கு வந்தால் அது திமுகவுக்கு பெரிய பின்னடைவை தரும் என ஐபேக்கின் சர்வே முடிவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் கூட்டணி கட்சிகள் தங்களை விட்டுப் பிரிந்து விடக்கூடாது என ஸ்டாலின் அவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மூலமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.