CM EPS Wishes to Pudukottai : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தக் கொரானா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை நன்கு உணர்ந்து செயலாற்றி வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் ஆய்வு செய்து வருவதுடன் அந்த மாவட்டத்திற்னகான நலதிட்டப் பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர் புதுக்கோட்டை ஓர் வீரம் விளைந்த மண் என்றும், மாநிலத்திலேயே அதிகமாக 110 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் என முதல்வர் தெரிவித்தார்.
மேலும் வீரர்கள் அதிகம் கொண்ட மண் என்றும், புதுக்கோட்டை ஒரு விவசாய பூமி என்றும் அம்மாவட்டத்தை முதல்வர் புகழ்ந்தார், பின் விவசாயிகள் கனவு திட்டமான காவிரி குண்டாறு திட்டமும் இந்த அரசால் நிறைவேற்றப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.