சத்தம் இல்லாமல் ஒரு படத்தையே முடித்துள்ளார் தனுஷின் மகன் யாத்ரா. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது தனுஷ் 50 என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளனர். 

இந்த படத்தில் தான் தனுஷின் மகன் யாத்ரா பணியாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு நடிகராக வேண்டும் என்று ஆசை இல்லை அதனால் அவரது ஆசைப்படியே ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். 

இதுவரை ராயன் படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தனுஷ் தன்னுடைய மகனை படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியிருப்பது தான் என சொல்லப்படுகிறது. 

சத்தம் இல்லாமல் ஒரு படத்தையே முடித்துள்ள யாத்ராவுக்கு தனுஷ் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.