சீனாவின் ஷியோலன் ரயில் நிலையத்தில் தந்தை ஒருவர் தன் மகனுடன் வந்திருந்தார். தனது உடைமைகளை ரயில் நிலையத்தின் சோதனை இயந்திரத்தில் வைத்து விட்டு மறுபுறம் வந்தார்.
அப்போது எதையோ தேடிக் கொண்டு இருந்தார், பிறகு அந்த சோதனை இயந்திரத்தின் உள்ளே இருந்து தன் மகன் வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் தெரிந்தது, இயந்திரத்தில் பொருட்கள் வைக்கும் இடத்திற்கு அருகில் இருந்த அந்த சிறுவன் உள்ளே சென்றிருக்கிறான்.
எக்ஸ்ரே இயந்திரத்தில் சோதனை செய்து கொண்டிருந்த அதிகாரிகளும் இந்த காட்சியை கண்டு அதிர்ந்து போனார்கள். எனினும் , இந்த எக்ஸ்ரே இயந்திரத்தில் குறைவான கதிரியக்கம் இருப்பதால், அந்த சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதுபோன்ற சம்பவம் சீனாவில் அடிக்கடி நடைபெறுகிறது. இதேபோன்று ஒரு பெண் தன் பொருட்கள் திருடு போய்விடுமோ என்ற அச்சத்தில், சோதனை இயந்திரத்தில் பொருட்களுடன் தானும் உள்ளே சென்ற செய்தியும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.