இந்தியா தோல்வியடைந்த நிலையில் கஸ்தூரி பதிவிட்டு இருந்த ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
World Cup Match 2019 : உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து சாதுர்யமாக விளையாடி வந்த இந்திய அணி செமி பைனலில் நியூஸிலாந்திடம் தோற்று போனது ரசிகர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தியா விளையாடி கொண்டிருக்கும் போதே அஜித் ரசிகர் ஒருவர் இந்தியா தோற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். அந்த நபர் ஒரு முஸ்லிமும் கூட.
இந்திய அணிக்காக கேக்கில் கோப்பை உருவாக்கிய ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்
இதனை பார்த்த கஸ்தூரி இந்தியா தோற்றது கூட கவலையில்லை, ஆனால் நீ பதிவிட்டது தான் வலிக்கிறது என அந்த நபரின் டீவீட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவர்களது விமர்சனங்களை பதிவிட தொடங்கியுள்ளனர். ட்வீட் பதிவிட்ட நபர் முஸ்லீம் என்பதால் அவர் இஸ்லாமிய நாடு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறி இருப்பார் என சிலர் கூறுகின்றனர்.
ஒரு சிலர் ஏற்கனவே கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருந்ததாலும் தல யார் என்ற பிரச்சனையில் அஜித் ரசிகர்கள் தோனியை வெறுப்பதாலும் இந்த டீவீட்டை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார் எனவும் விமர்சிக்கின்றனர்.
கஸ்தூரி எந்த நோக்கத்தில் பதிவிட்டார் என்பது தான் இப்பொது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
More than India's loss , This message was heartbreaking to me.
இவன் எந்த ஊர்? எந்த நாடு? இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க ? pic.twitter.com/ErlQBNaz6y— Kasturi Shankar (@KasthuriShankar) July 10, 2019