Vishal Helps to Salem Srilanka Tamilans
Vishal Helps to Salem Srilanka Tamilans

முதலமைச்சரின் ஊரான சேலத்தில் சிக்கித் தவித்த இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவியுள்ளார்.

Vishal Helps to Salem Srilanka Tamilans : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் மக்களுக்கு பல்வேறு விதங்களில் உதவி வருகின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலும் தனது தேவி அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி நடிகையாக காலம் தள்ள முடியும் அதற்கு நீங்கள் தயாரா? பிரியா பவானி சங்கர் கொடுத்த அடுத்த அதிரடி பதில்!

சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்ற ஊரில் உள்ள முகாமில் 300க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ண உணவில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இதனையறிந்த விஷால் உடனே தன்னுடைய தேவி அறக்கட்டளையின் மூலமாக அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அளித்துள்ளார். இந்த உதவியை தன்னுடைய மேனேஜர் ஹரி கிருஷ்ணா மூலமாக செய்துள்ளார்.

உதவியைப் பெற்றுக் கொண்ட இலங்கை அகதிகள் விஷாலுக்கு நன்றி கூறி உள்ளனர்.