விஷால், ஹரி படம் தொடங்குவது எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.
இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைய உள்ளார்.
ஏற்கனவே இந்த படம் கடந்த மாதமே தொடங்கும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை. இப்படியான நிலையில் இந்த திரைப்படம் ஒரு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹரி, விஷால் கூட்டணியில் வெளியான 2 படங்களும் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இவர்கள் இணையும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.