தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தனி ஒருவன்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இதில் வில்லனாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் கொல்லப்பட்டு விட்டதால் இதில் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை. இப்படியான நிலையில் தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். அரவிந்த் சாமியை காட்டிலும் சிறப்பான நடிப்பை பஹத் பாசில் கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.