இறந்த மருத்துவரின் உடலை என்னுடைய இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கேப்டன் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
Vijayakanth offers place : கொரானா வைரஸ் காரணமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் பலரும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர்.
போனி கபூரின் அடுத்த தமிழ் இயக்குனர், ஹீரோ இவர் தான் – அப்போ அஜித் இல்லையா? வெளியான பரபரப்பு தகவல்.!
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் மருத்துவர் சைமன் என்பவர் வைரஸ் தாக்கி உயிரிழந்தார். மக்களுக்காக போராடி உயிரை தியாகம் செய்த இவரது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் இந்த சம்பவத்திற்கு மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இறந்தவரின் உடலிலிருந்து வைரஸ் இன்னொருவருக்கு பரவாது என அதிகாரபூர்வமாக கூறியும் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்ய தன்னுடைய ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாக கூறியுள்ளார்.
விஜயகாந்தின் இந்த அறிவிப்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது. தங்களுக்காக போராடி கண்ணுக்குத் தெரியாத கிருமிக்கு தன்னுடைய உயிரை அர்ப்பணிக்கும் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் இடையூறு செய்யக்கூடாது எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துகொள்ளலாம்.#SpreadHumanity | #COVID19 pic.twitter.com/CG2VLBzj4F
— Premallatha Vijayakant (@imPremallatha) April 20, 2020