600க்கு 600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக கொடுத்துள்ளார் விஜய்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அவர் தளபதி விஜய். இவர் சென்னை நீலாங்கரை பகுதியில் வைத்து தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.
மேலும் மாணவர்களுக்கு படிப்பு தான் முக்கியம் படிப்பை தவிர்த்து பார்த்தால் குணமும் நல்ல சிந்தனையும் தான் எஞ்சி இருக்கும். ஒருவன் வாழ்க்கையில் பணத்தை கூட இழக்கலாம் ஆனால் குணத்தை இழக்கக்கூடாது, மேலும் வெளியே செல்லும்போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய விஜய் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு விலை மதிப்புமிக்க வைர நெக்லஸை பரிசாக கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
தளபதி விஜய் செய்துள்ள இந்த செயல் அனைவரையும் பாராட்டவும் பிரம்மிக்கவும் செய்துள்ளது.