தளபதி விஜய் முதல் முறையாக செய்துள்ள வித்தியாசமான செயலால் ட்விட்டர் ஆட்டம் கண்டு விட்டது.
Vijay Selfie With Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 1 முதல் 10 வரை நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்க பாதையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்றோடு ஷூட்டிங் முடிய தளபதி விஜய் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு thank you நெய்வேலி என பதிவிட்டு இருந்தார்.
விஜய் இப்படியொரு டீவீட்டை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விட்டது.
பொதுவாக விஜய் தன்னுடைய ட்விட்டர் கணக்கை படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் போன்றவற்றை தவிர வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை.
இந்நிலையில் தற்போது வித்தியாசமான முதல் முறையாக ஷூட்டிங் முடிந்ததை அறிவித்ததை ஆச்சரியத்துடன் பார்க்கிறது கோலிவுட் வட்டாரம்.
மேலும் இதெல்லாம் IT ரைடை ஏவி விட்ட பிஜேபி-க்கு தன்னுடைய பலத்தை காட்டி ஆட்டம் காட்டவே இப்படியொரு செயலை செய்ததாகவும் பேசுகின்றனர்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020