அரசியலில் என்ட்ரி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறார் தளபதி விஜய்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை முடித்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். அதற்காக இரவு பாடசாலை தொடங்க உத்தரவு போட்டிருந்த நிலையில் 67 இடங்களில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டது நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திட்டத்தை தமிழக முழுவதும் விரிவுபடுத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தை 150 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக சென்று பார்வையிட்டு மக்கள் இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஆய்வு செய்ய வேண்டும் என புரூஸ்லி ஆனந்துக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.