பிகில் படத்தால் 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டதை பற்றி கஸ்தூரி அதிரடி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் அதிகாலை காட்சி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு பின்னர் ஒரு வழியாக வெளியானது.
அதிகாலை காட்சி வெளியாகாது என்ற தகவல் பரவியதும் ரசிகர்கள் தியேட்டர் முன்பே சண்டையிட தொடங்கினர். கிருஷ்ணகிரியில் இதுவரை அராஜகத்தில் ஈடுபட்ட 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இது குறித்து கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அரசாங்கமும் போலீசும் தவறு செய்தவர்கள் மீது அதிவேக நடவடிக்கை எடுப்பதை பாராட்டியே தீர வேண்டும். இந்த பொறுப்புணர்ச்சி விஜய் மட்டுமில்லாமல் யார் நடித்த படம் ரிலீஸ் ஆனாலும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாமா?
அரசாங்கமும் போலீசும் தவறு செய்தவர்கள் மீது அதிவேக நடவடிக்கை எடுப்பதை பாராட்டியே தீரவேண்டும். இந்த பொறுப்புணர்ச்சி விஜய் மட்டுமில்லாமல் யார் நடித்த படம் ரிலீஸ் ஆனாலும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாமா?
Happy if the government exhibits responsibility not political vendetta.— Kasturi Shankar (@KasthuriShankar) November 2, 2019