விஜய் ஆண்டனி அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தனது இசையால் ஏராளமான ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

அந்த வகையில் அவரது நடிப்பில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாடிய சில தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை அண்ணாநகர் பகுதியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஜய் ஆண்டனி ‘இளைஞர்கள் போதை பழக்கத்தை விளையாட்டாக ஆரம்பித்து கடைசியில் சுயநினைவை இழக்கும் அளவுக்கு சென்று விடுகின்றனர். இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்’ என அந்நிகழ்ச்சியின் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். இவரது இந்த தகவல் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.