விஜயுடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ் சினிமாவில் விநியோகிஸ்தராக பயணத்தை தொடங்கி பிறகு குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி ஆதவன் படத்தில் சிறு வேடத்தில் நடித்து நடிகரானவர் உதயநிதி ஸ்டாலின்.
அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் முழு நேர நடிகராக உருவெடுத்தார். தொடர்ந்து படங்களில் நடிப்பதோடு பட தயாரிப்பு, விநியோகம் போன்றவற்றையும் கவனித்து வந்த இவர் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் இனி படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்த நிலையில் இவரது நடிப்பில் இறுதி படமாக மாமன்னன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் விஜயுடன் ஏற்பட்ட பிரச்சனை பற்றி பேசி உள்ளார்.
பொதுவாக விஜய் யாரிடமும் அவ்வளவு எளிதாக பழக மாட்டார். பழகி விட்டால் நெருக்கமாகி விடுவார். குருவி படத்தின் போது அப்படி தான் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். படம் ரிலீஸ்க்கு பிறகு என்னை பற்றி அவரிடமும் அவரை பற்றி என்னிடம் யாரோ தப்பு தப்பாக கூறியதால் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு வருடங்கள் பேசாமல் இருந்தோம்.
பிறகு நேரில் சந்தித்து பேசிய போது உண்மை அறிந்து மீண்டும் நண்பர்களாகி விட்டோம் என தெரிவித்துள்ளார்.