பவதாரணியின் கடைசி புகைப்படங்களை வெளியிட்டு கண்ணீருடன் பதிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு.
Venkat Prabhu Emotional Post About Bavatharani : தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவரது மகள் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இவரது மறைவு திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள் பலரும் பவதாரணியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பவதாரணி உடன் எடுத்த கடைசி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள வெங்கட் பிரபு அது குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.