வாத்தி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் இவர் இதற்கிடையில் வெங்கி அட்லூரில் இயக்கத்தில் உருவாகி இருந்தா ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் இருந்த முதல் பாடல் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இருந்த நிலையில் இப்படத்தில் யுக பாரதி எழுதியிருக்கும் செகண்ட் சிங்கிள் பாடலான ‘நாடோடி மன்னன்’ என்னும் பாடல் ஜனவரி 17 ஆம் தேதியான இன்று மாலை 4:04 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு புதிய போஸ்டருடன் தெரிவித்திருந்தது.

அதன்படி இப்படத்தின் நாடோடி மன்னன் பாடல் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி இருப்பதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.