ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் வசந்த் ரவி அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெய்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படம் குறித்து இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வசந்த் ரவி அளித்திருக்கும் சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது.

அதாவது தரமணி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிசயமான வசந்த் ரவி அவர்கள் சமீபத்திய பேட்டியில், “ரஜினி சாரின் ரசிகர்களுக்கு ஜெயிலர் திரைப்படம் விருந்தாக இருக்கும். இதுவரை 168 திரைப்படங்களில் பார்க்காத சூப்பர் ஸ்டாரை இப்படத்தில் பார்ப்பீர்கள், நான் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நெல்சன் இப்படத்தை அருமையாக எடுத்துள்ளார். நிச்சயம் இது ஒரு கில்லர் படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இவரது இந்த பேட்டி ரசிகர்களுக்கு படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.