ஒரே வீட்டில் எஸ்பிபி மற்றும் விஜய் குறித்து பதிவிட்டு வைரல் ஆகி வருகிறார் வனிதா விஜயகுமார்.
Vanitha Tweet About Vijay and SPB : இந்திய சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். 16 மொழிகளில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருடைய மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்பிபி உடனான நினைவுகளைப் பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகை வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபி குறித்தும் விஜய் குறித்தும் அது விட்டு இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வைரல் ஆகியுள்ளார்.
அதாவது எஸ்பிபி-ன் திறமையை பாராட்டிய வனிதா, நான் விஜயிடம் மலரே மௌனமா என்ற பாடலை பாடச் சொல்லி தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
வனிதாவின் இந்தப்பதிவு தற்போது செம வைரலாகி வருகிறது.