பிக் பாஸ் வீட்டிற்குள் என்னை அழைத்தது ஏன் என கூறியுள்ளார் வனிதா விஜயகுமார்.
Vanitha Speech about Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது வாரத்தில் வெளியேறியவர் வனிதா.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே சண்டையும் சச்சரவுமாக இருந்த வனிதா தான் இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு வாரமாக தூணாக இருந்து வந்தார்.
அவர் வெளியேறியதும் நிகழ்ச்சி படு மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வனிதா என்னை முதல் சீசனில் இருந்தே பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து கிட்டு தான் இருந்தாங்க.
1000 படம் நடிச்சாலும் விஜய்க்கு இதை விட ஒரு பெருமை கிடைக்காது – புகைப்படத்தை பாருங்க.!
நான் சர்ச்சையான ஆள் என்பதால் தான் என்னை அழைத்தார்கள் என நினைக்கிறன். சர்ச்சை என்று கூறியதற்கு அர்த்தம் ஒரு பிரச்னையை பார்த்து விட்டு சும்மா இருக்க மாட்டேன் என்பது தான்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் நான் வெளியேற்றப்படுவேன் என என மனம் கூறியது.
பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் முழுவதும் நடப்பதை 1 மணி நேரமாக எடிட் செய்து காண்பிக்கிறார்கள். அது தவறு. அதில் பல விசயங்கள் தெரியாமலே போய் விடும். மக்களும் அதை வைத்து ஒருவரை பற்றி முடிவு செய்ய கூடாது என கூறியுள்ளார்.
மேலும் எங்களின் தேவைகளுக்காக பிக் பாஸிடம் கெஞ்சுவோம். சொல்ல போனால் இது பிக் பாஸ் இல்ல பெக் ( பிச்சை ) பாஸ் என கூறியுள்ளார்.