வாரிசு பட இயக்குனரின் நெகிழ்ச்சியான பேட்டி வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரை உலகில் பிரபல இயக்குனராக இருக்கும் வம்சி படைப்பள்ளியின் இயக்கத்தில் கடந்த 11ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியானது. அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் நேரடியாக மோதியை இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் சேர்த்து 150₹ கோடி ரூபாய் தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படகுழு கொண்டாடியுள்ளது. அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வம்சி படைப்பள்ளியின் நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், வாரிசை வெற்றி படமாக மாற்றிய தமிழ் மக்களுக்கு நன்றி, இப்படத்தின் மூலம் விஜய் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி உள்ளேன். என்னை தெலுங்கு இயக்குனர் என வேறுபடுத்தாதீர்கள் நான் தெலுங்கு இயக்குனரோ, தமிழ் இயக்குனரோ இல்லை. முதலில் மனிதன், பிறகுதான் மற்றவை எல்லாம் இன்று கூறியிருக்கிறார்.