வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட்டை இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பலவிதமான கெட்டப்களில் நடித்து வருகிறார். பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை அடுத்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதன் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் இப்படம் குறித்து பகிர்ந்து இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு வாடிவாசல் படத்திற்கான வேலைகள் தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது புதிய அப்டேட்டாக இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் நடிகர் சூர்யா வளர்க்கும் காளையை ஸ்கேன் செய்து ரோபோ போல் லண்டனில் உருவாக்கி வருகிறோம் எனக் கூறி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.