திரிஷாவின் ராங்கி திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷாவின் நடிப்பில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராங்கி திரைப்படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏ ஆர் முருகதாஸின் கதையில் உருவாகியுள்ள இப்படத்தை எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற திரைப்படத்தை இயக்கி பிரபல இயக்குனராக இருக்கும் எம். சரவணன் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சி.சத்யா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

திரிஷாவின் நடிப்பில் ஆக்சன் திரில்லர் கதைக்களமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . அதில் ராங்கி திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.