சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி ராஜேந்தர் சிம்பு திருமணம் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளோடு விளங்கி வருபவர் நடிகர் டி ராஜேந்தர். இவர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‌

இதனையடுத்து இவர் மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் சிம்பு திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சிம்புவின் நல்ல மனசுக்கு ஏற்றபடி நல்ல பெண் கிடைப்பார். திருமணம் எல்லாம் கடவுள் நினைத்தால் தான் நடக்கும். கடவுள் ஆசியுடன் விரைவில் நல்லது நடக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.