பிரபல திரையரங்கில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது துணிவு திரைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இந்த திரைப்படம் இன்றோடு 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் சென்னையில் உள்ள VR மாலில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட அந்த இடமே பரபரப்பாகி உள்ளது.
இந்த சம்பவத்தால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.