தென்றல் வந்து என்னை தொடும் சீரியலிருந்து வினோத் பாபு விலகுவதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் வினோத்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நாயகனாக வினோத் பாபு நடிக்க நாயகியாக பவித்ரா ஜனனி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளி திரைப்பட வாய்ப்பு காரணமாக வினோத் பாபு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக செய்தி பரவ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
என் நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் வினோத் பாபு. அதாவது ஒரே ஒரு குறும்படத்தில் தான் நடிக்கச் சென்றேன் அதற்குள் இப்படியா? முடியல தெய்வமே.. தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தான் தொடர்ந்து இருப்பேன், இருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.