இனி பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் லாபம் என்று எல்லாம் எதார்த்த முடியாத அளவிற்கு செக் வைத்துள்ளது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன, குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் இவ்வளவு வசூல் அவ்வளவு வசூல் என ஆளாளுக்கு அடித்து தள்ளி வருகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் செக் வைக்கும் விதமாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இனி பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்தால் அதற்கான நஷ்டத்தை தயாரிப்பாளர், விநோயோகிஸ்தர், நடிகர் ஆகியோர் ஏற்று ஈடுகட்ட வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் 8% மாநில கேளிக்கை வரியை திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் மார்ச் 1 முதல் தியேட்டர்கள் மூடப்படும் எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இனி பெரிய நடிகர்களின் படங்கள் பெரிய வசூல் கொடுக்கவில்லை என்றால் தியேட்டர் உரிமையாளர் சங்கமே உண்மையை வெளியே கொண்டு வந்து விடும் என எதிர்பார்க்கலாம்.