தனி ஒருவன் 2 படத்தை பற்றி ஒரு மாஸான தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
Thani Oruvan 2 Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. மோகன் ரவியான இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாக ஜெயம் ரவியாக மாறினார்.
இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் வித்தியாச வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக பூமி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
விவசாயத்தைப் பற்றி பேசும் படமாக மட்டுமல்லாமல் விவசாய பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு சொல்லும் படமாக இப்படம் உருவாகி வருவதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.
மேலும் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனி ஒருவன் 2 படம் குறித்து கேட்டதற்கு, அண்ணா ஸ்கிரிப்ட் எழுதி முடித்து விட்டார். எனக்கு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு. அது எல்லாம் முடித்தவுடன் தனி ஒருவன் 2 தொடங்கும் என கூறியுள்ளார்.
அடுத்த படத்திற்கு ரெடியான கோமாளி இயக்குனர் – ஹீரோ யார் தெரியுமா?
அதுமட்டுமல்லாமல் தனி ஒருவன் முதல் பாகத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமியை விட இன்னும் ஸ்பெஷலான ஒரு வில்லனுடன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வில்லன் யார் என்பதை ஜெயம் ரவி தெரிவிக்கவில்லை. இதனால் அப்படி யார் வில்லனாக நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஒருவன் 2 படத்தில் அரவிந்த்சாமிக்கு பதிலா யார் நடித்தால் இன்னும் மாஸாக இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்பதை எங்களோட கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க.