தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் விக்ரம் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகளும் சியான் விக்ரம் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன், பார்வதி நாயர், பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமிருக்கு சிறிய விபத்து ஏற்பட்டிருந்தது. இதனால் சில நாட்கள் ஓய்வில் இருந்த நடிகர் விக்ரம் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தொடங்கி இருப்பதாகவும் இதில் நடிகர் விக்ரம் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவருடன் நடிகை மாளவிகா மோகனன் இணைவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 15 நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.