தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு விஜய் டிவி சுபம் போட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலின் கடைசி நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
இதை எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அர்ஜுனன் அம்மா ஜெயந்தியிடம் தனது கையால் விஷத்தை வைத்துக் கொடுத்த விஷயத்தை சொல்லி அழுகிறார். ஏம்மா இப்படி பண்ண நம்ப தம்பி அப்ப நம்மோட இருக்க மாட்டானா என்று சொல்ல அவ பொண்டாட்டிய ரூமுக்குள்ள அடச்சு வச்சு பெத்த குழந்தையை கொன்னுடுவேன்னு மிரட்டுறான். அவன் மிருகமா மாறிட்டான்.
அவன் மனசுல விஷத்தை விதைத்த நானே அதை களையெடுத்துட்டேன் என்று சொல்ல மறுப்பக்கம் அர்ஜுன் தட்டு தடுமாறி ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்கிறார்.
இங்கே ஜெயந்தியும் அவரது அம்மாவும் குழந்தையை அர்ஜுன் எடுத்துச் சென்றிருக்கும் விஷயம் அறிந்து வெளியே வர அர்ஜுன் பாதுகாப்புக்கு விட்டுச் சென்ற ஆள் கத்தியை காட்டி மிரட்டுகிறார். இந்த நேரத்தில் போதையின் குடும்பம் எல்லோரும் இங்கு வந்து விடுகின்றனர். பிறகு அவனை அடித்து துரத்த அர்ஜுனுக்கு விஷம் வைத்துக் கொடுத்து விஷயத்தை சொல்லி அழுகின்றனர்.
தமிழும் சரஸ்வதியும் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்து குழந்தையை பிடுங்கிக் கொள்கின்றனர். அர்ஜுன் ரத்த வாந்தி எடுக்க ஹாஸ்பிடலில் அனுமதிக்க டாக்டர் சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்றுகிறார்.
அதன் பிறகு அர்ஜுன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். மேக்னா கொலை கேசவன் எனக்கு சம்பந்தம் இருக்கு நான் ஜெயிலுக்கு போக கூட ரெடியா இருக்கேன் என்று சொல்ல கோதை குடும்பம் அதான் நீங்க திருந்திட்டீங்களே அப்புறம் எதுக்கு ஜெயிலுக்கு போகணும் அதெல்லாம் வேண்டாம் என சொல்கின்றனர்.
பிறகு கோதை எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா ஒன்னா இருக்கலாம் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்க பழையபடி சாட் போட்டு சமைக்க தொடங்குகின்றனர். காலையில் அருகம்புல் ஜூஸ் கொடுக்க குடும்பம் மட்டுமே கலகலப்பாக குடிப்பதோடு இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளனர்.