Tamilnadu Rain : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெறும் என்றும், அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென் மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து மழை பெய்து வருகிறது” இவ்வாறு கூறினார்.