Tamil Nadu Governor Health Details : உலகத்துக்கே ஆட்டம் காட்டும் கொரோனா, இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றானது, பாமர மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் தற்பொழுது ஆளுநரையும் விட்டுவைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், ஆளுநர் மாளிகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 35 பேருக்கு நெகட்டிவ் என்றும், மூன்று பேருக்கு பாசிட்டிவ் என்றும் கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல பேருக்கு அல்வா கொடுத்த த்ரிஷாவுக்கே ஆப்பு வைத்த அஜித் – வைரலாகும் தல ரசிகர்களின் மீம்ஸ்.!
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் சேர்ந்த மருத்துவ அலுவலர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல்நிலையை பரிசோதித்தார்.
ஆளுநர் பூரண முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. அதேசமயம் ஏழு நாட்கள் தனிமையில் இருக்கும்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்டைம், மருத்துவ அலுவலர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி ஆளுநர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.