தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வளம் வந்த ரமணி அம்மாள் இன்று காலமானார்.

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து கொண்டிருந்தவர் ராக் ஸ்டார் ரமணி அம்மாள். 63 வயதான இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப என்னும் பாடல் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் வெள்ளி திரையிலும் பல ஹிட் பாடல்களைப் பாடி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் . அதன்படி, காதல் படத்தில் ‘தண்டட்டி கருப்பாயி’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ஜூங்கா படத்தில் இடம்பெற்ற (ரைஸ் ஆஃப் டான்) பாடல், சண்டக்கோழி 2 படத்தில் (செங்கரத்தான் பாறையுல) பாடல், காப்பான் படத்தில் (சிரிக்கி) பாடல், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் (இன்டர்நெட் பசங்க) போன்ற பல ஹிட் பாடல்களை படி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

அதன் பிறகு சின்னத்திரையில் பல சீரியல்களுக்கும் பாடல்களைப் பாடியுள்ள ரமணி அம்மாவின் இந்த மறைவு திரை துறையினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.