கோவாவை தொடர்ந்து மும்பை டோ விசிட் அடித்துள்ளார் நடிகர் சூர்யா.
Suriya Walking With Jyothika : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் கோவாவிற்கு சென்றிருந்தார். அங்கே கிறிஸ்துமஸ் கொண்டாடிய சூர்யா தற்போது மும்பை சென்றுள்ளார். அதிகாலையில் தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் அவர் வாக்கிங் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை சூர்யா-ஜோதிகா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.