பாலாவின் வணங்கான் படத்தால் சூர்யாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
கதையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்த கதை சூர்யாவுக்கு செட்டாகாது ஆகையால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறார் என பாலா தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் மறுநாள் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியானது.
இப்படியான நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தை கைவிட்டதால் அவருக்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.