நான் சைலன்ட்டான வில்லன் மற்றும் கார்த்தி ஹீரோவாக ஒரே படத்தில் நடிக்க ஆசை என சூர்யா தெரிவித்துள்ளார்.

Suriya About Join With Karthi : சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சிவகுமாரின் மகனான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் தம்பியான நடிகர் கார்த்தியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து நடிகர் சூர்யாவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். படவிழா ஒன்றில் கலந்து கொண்ட போது இயக்குனர் லிங்குசாமி நீங்களும் கார்த்தியும் படத்தில் இணைந்து நடித்தால் யார் ஹீரோ? யார் வில்லன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு.., TIME WASTE – Meera Mitun-க்கு முற்றுப்புள்ளி வைத்த Suriya..!

இதற்கு பதிலளித்த சூர்யா வீட்டில் எப்போதுமே நான் தான் சைலன்ட்டான வில்லன், கார்த்தி எப்போதுமே அமைதியான பையன் நல்ல பையன் அப்பாவின் செல்லப் பையன்.

ஆகையால் படத்திலும் அதே போல் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். சூர்யா சைலண்ட்டா கார்த்தி ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

சூர்யாவின் இந்த ஆசையை நிறைவேற்ற தற்போது லிங்குசாமி ஒரு கதையை தயார் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

விரைவில் சூர்யா மற்றும் கார்த்தியை ஒரே படத்தில் பார்க்கலாம் இது பார்க்கப்படுகிறது.