நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் வீட்டை விட்டு மூன்றாவது ஆளாக வெளியேற்றப்பட்டார்.
இவர் அதிக ஓட்டுகள் பெற்றும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கமல்ஹாசன் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற சில காரணங்கள் இருப்பதாக இன்று கொடுத்திருந்தார்.
சுரேஷூம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நான் வெளியேற சில காரணங்கள் இருப்பதாக தெரிவித்தார். அது என்ன என்பதை விரைவில் உங்களுக்கு தெரியவரும் என கூறியிருந்தார்.
அதாவது அவர் விஜய் டிவியில் புதிதாக துவங்க உள்ள குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.