சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 9-வது கிராண்ட் பைனல் நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த சீசனுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மொத்தமாக முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மசான்ஸ் நிறுவனம் நிகழ்ச்சி தயாரிப்பில் இருந்த வெளியேறுவதாகவும் புதிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதிய சீசன் தொடங்கும் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை குளோபல் விலேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.