ரூட் மாறி செல்லும் சீரியல்களுக்கு எண்டு கார்டு போட சொல்லி வருகிறார்கள் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அதே சமயம் சில சீரியல்களில் ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பு தற்போது அப்படியே குறைந்து போராக மாறி விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் ஒரு கொலையை வைத்து சுழன்றடித்து வருவது ரசிகர்களுக்கு வெறுப்பை மட்டுமே கொடுத்துள்ளது.
அதற்கு அடுத்ததாக விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வந்த எதிர் நீச்சல் சீரியல் தற்போது தொடர்ந்து சறுக்கத்தை சந்தித்து வருகிறது. கதையின் போக்கு மாறியதே இதற்கு காரணம் என கூறி வருகின்றனர்.
அதே போல் இனியா, மிஸ்டர் மனைவி போன்ற சீரியல்களும் பழைய விறுவிறுப்பு இல்லை என கூறி வருகின்றனர். இதன் காரணமாக இதற்கெல்லாம் எண்டு கார்டு போடலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.